கனமழைக்கு வாய்ப்பு: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!!

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!!
Published on

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.

இந்த சூழலில் மழைப்பொழிவு அடுத்த மாதம் நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

மிக கனமழை எச்சரிக்கை எதிரொலியால் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com