சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
Published on

விழுப்புரம்,

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம்- சின்னபாபுசமுத்திரம் ரெயில் நிலையங்களுக்கிடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்- புதுச்சேரி முன்பதிவில்லா ரெயில் (வண்டி எண் 06025) இன்று (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

அதேபோல் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி- திருப்பதி முன்பதிவில்லா ரெயில் (வண்டி எண் 16112), புதுச்சேரி- விழுப்புரம் இடையே இன்று பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பதி புறப்பட்டுச்செல்லும்.

இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com