முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்முதிர்வு தொகை பெற ஆவணங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள் :கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்

முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுபாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள் என்று திட்ட பயனாளிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில்முதிர்வு தொகை பெற ஆவணங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள் :கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்
Published on

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுபாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகள் தற்போது 18 வயதை கடந்ததும் முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.

எனவே இதில் முதிர்வு தொகை பெறப்படாமல் உள்ளவர்கள் தாங்கள் விண்ணப்பித்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ள வைப்புத்தொகை பத்திரத்தின் நகல், பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ் நகல், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் 2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்

மேலும் ஆவணங்களை சமர்ப்பித்த பயனாளிகளின் கருத்துரு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கான முதிர்வுத் தொகை பெண் குழந்தைகளின் வங்கி கணக்கிற்கு பெற்று வழங்கப்படும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை சமர்பித்த பயனாளிகள் கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் 5-வது தெருவில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2-வது செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com