சென்னை: தலையில் தண்ணீர் டம்ளருடன் ஓம்கார ஆசனம் செய்து உலக சாதனை படைத்த 7 வயது சிறுவன்...!

பூந்தமல்லியில் 6 நிமிடங்கள் தலையில் தண்ணீர் டம்ளருடன் ஓம்கார ஆசனம் செய்து 7 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னை: தலையில் தண்ணீர் டம்ளருடன் ஓம்கார ஆசனம் செய்து உலக சாதனை படைத்த 7 வயது சிறுவன்...!
Published on

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபுரவி, இவர் யோகா மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகன் தர்ஷித் (வயது 7) பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே தர்ஷித் யோகாசனங்களை கற்று வருகிறார். அதில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பயிற்சிகளையும் எடுத்து வந்துள்ளார். இதற்கு அவரது தந்தை பாபுரவியும் வழிகாட்டியாக இருந்து பயிற்சி அளித்துள்ளார். யோகாசனங்களில் மிகவும் கடினமான ஆசனமான ஓம்கார ஆசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் தர்ஷித் ஓம்கார ஆசனத்தில் தலையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைத்தவாறு 6.14 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். தர்ஷித்தின் இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்த சாதனை செய்வதை நேரில் பதிவு செய்வதற்காக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் நேரில் வந்து பார்த்து பதிவு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினர். இதற்கு முன்பு இந்த ஓம்கார ஆசனத்தில் இது போல 2.45 நிமிடங்கள் இருந்ததே சாதனையாக இருந்தது. தர்ஷித் அந்த சாதனையை முறியடித்ததுடன் மூன்று மடங்கு நேரம் அதிகமாக ஓம்கார சாதனை செய்து அசத்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com