சென்னை விமான நிலையம்: நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னை விமான நிலையம்: நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல்-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து, ஜூன் 30 ஆம் தேதி வரையிலான முதல் 6 மாதங்களில் விமான பயணிகள் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தற்போது வரை இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com