சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
Published on

சென்னை,

கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் 60 கி.மீ. தூரத்திற்கான வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் முதற்கட்டமாக வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை 29 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், நெடுஞ்சாலை சட்டத்தை பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நிலம் கையகப்படுத்தும் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com