சென்னை: போதை தலைக்கேறிய அமெரிக்க இளைஞர் - விடுதி ஊழியர்களுடன் தகராறு...

சென்னையில், போதை தலைக்கேறி ஆம்புலன்ஸ் கண்ணாடியை அடித்து உடைத்து, அராஜகத்தில் ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: போதை தலைக்கேறிய அமெரிக்க இளைஞர் - விடுதி ஊழியர்களுடன் தகராறு...
Published on

சென்னை,

அமெரிக்காவை சேர்ந்த கயானி மாகர்லோ என்பவர், தனது நண்பரின் திருமணத்திற்காக, சென்னைக்கு வந்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர், மயிலாப்பூர் டிடிகே சாலையில் உள்ள மது பாரில் நடந்த விருந்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, கயானிக்கு போதை தலைக்கேறியதால், அருகில் இருந்தவர்களுடன் வீண் தகராறு செய்து மோதலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கயானியை அவரது நண்பர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கேயும், விடுதி ஊழியர்களுடன் அவர் தகராறு செய்யவே, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிக்கு வந்த போலீசார், காயமடைந்த நிலையில் கிடந்த கயானியை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட அவரை, போலீசார் பிடித்து, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்த சம்பவம் குறித்து, அமெரிக்கா தூதரகத்திற்கு தகவல் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com