சென்னை புறநகர் ரெயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றம்

கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் செல்லும் ரெயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் ரெயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக் கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு 5, 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த 45 நாட்களில் தற்போது உள்ள மின்சார ரெயில் அட்டவணை மாற்றப்பட்டு, தற்காலிக ரெயில் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிறு தனி நேர அட்டவணை கிடையாது.

நடைமேடை மாற்றப்படுவதால் அதற்கேற்ப ரெயிலின் வருகை/புறப்பாடு மாறுபடும் என்பதால், மேற்கண்ட 45 நாட்களுக்கு மட்டும் தற்காலிக ரெயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் செல்லும் ரெயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com