வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி

வாகனம் மோதி சென்னை வாலிபர் பலியானார்.
வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி
Published on

சென்னை சைதாப்பேட்டை ஜோதி ராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 25). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது தோழியை பார்ப்பதற்காக பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி மின்வாரியம் எதிரே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்தில் இறந்து போன பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com