சென்னை-ஷீரடி வாராந்திர ரெயில் சேவை - இன்று முதல் மீண்டும் தொடக்கம்

சென்னை-ஷீரடி இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.
சென்னை-ஷீரடி வாராந்திர ரெயில் சேவை - இன்று முதல் மீண்டும் தொடக்கம்
Published on

சென்னை,

சாய்நகர் ஷீரடி - சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதன்படி வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும் ரெயில் (22601) 13-ந் தேதி காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சாய்நகர் ஷீரடி வந்தடையும்.

இதேபோல வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் ரெயில் (22602) வருகிற 15-ந் தேதி காலை 8.25 மணிக்கு சாய்நகர் ஷீரடில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரெயில் அகமதுநகர், தவுன்ட், சோலாப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த ரெயில் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com