வடகிழக்குப் பருவமழை - வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை - வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
Published on

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com