பாதி வழியில் காரை நிறுத்தி, பள்ளி மாணவிகளை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் போது, பாதி வழியில் காரை நிறுத்தி பள்ளி மாணவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
பாதி வழியில் காரை நிறுத்தி, பள்ளி மாணவிகளை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Published on

தர்மபுரி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தர்மபுரி சென்றார்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நான்கு தளங்களாக 5,060 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தை அவர் பார்வையிட்டார். இந்த பிரிவு ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதல்-அமைச்சர் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.

தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதி வழியில் காரை நிறுத்தி, திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார். அப்போது கைதட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக பள்ளி மாணவிகள் வரவேற்றனர். பின்னர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com