குழந்தையை அடித்து உதைத்து சித்திரவதை செய்த துளசிக்கு மனநல பரிசோதனை

குழந்தையை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசியை, மனநல பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
குழந்தையை அடித்து உதைத்து சித்திரவதை செய்த துளசிக்கு மனநல பரிசோதனை
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மணலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 37). இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியை சேர்ந்த துளசி (22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோகுல்(4), பிரதீப்(2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு துளசி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே துளசி தனது 2 வயது மகனான பிரதீப்பை கீழே படுக்க வைத்து கையால் குழந்தையின் வாயை தாக்கும் காட்சி மற்றும் குழந்தையின் கால்களை தாக்கும் கொடூரமான காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து வடிவழகன் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஆந்திராவுக்கு விரைந்து சென்ற போலீசார் துளசியை நேற்று மாலை கைது செய்தனர். இன்று காலை செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் 2 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர். துளசி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து அவருக்கு மனநல பரிசோதனை நடத்துவதற்காக, விழுப்புரம் - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் துளசியை ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com