வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செங்கத்தில் தொடர் விபத்து காரணமாக வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Published on

செங்கம்

செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற கல்லூரி மாணவி சைக்கிளில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் நேற்று  இரவு சாலையை கடக்க முயன்ற போது பெங்களூருல் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த பகுதியில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம் மின் விளக்குகள் தெரியாததால் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் பக்கிரிபாளையம் கூட்ரோடு பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருவதாகவும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்பேது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் காத்து நின்றது. மேலும் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com