கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்
Published on

கொப்பரை தேங்காய் கொள்முதல்

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொப்பரை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது தேங்காய் பருப்பு விலை ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

30-ந் தேதி கடைசிநாள்

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

தேங்காய் கொப்பரை கொள்முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டு உள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com