மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

மார்த்தாண்டம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லைய சேர்ந்தவர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் மைதீன் (வயது28). இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூரில் ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.

அதே கடையில் நாங்குநேரியை சேர்ந்த நாகூர் மீரான் (18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்துக்கு சென்று விட்டு ஆற்றூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மதீன் ஓட்டிச் சென்றார். நாகூர் மீரான் பின்னால் அமர்ந்திருந்தார்.

உண்ணாமலைகடை பகுதியில் வந்த பாது எதிரே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (65) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின.

பரிதாப சாவு

இந்த விபத்தில் மைதீன், நாகூர் மீரான், செல்வராஜ் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நாகூர் மீரானும், செல்வராஜும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி காண்டிருந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மைதீனின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com