கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
Published on

கேரளா வி.கே.என். உள்விளையாட்டு அரங்கத்தில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகவும் பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டு 10 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பயிற்சி அளித்த மாஸ்டர் சதீஷ்குமார், ராஜ்குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com