கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம்

கொலை செய்யப்பட்ட கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.
கோவில் ஊழியர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம்
Published on

நெல்லை அருகே உள்ள மேலசெவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுச்சாமி (வயது 55). கோவில் ஊழியரான இவரை ஒரு கும்பல் கடந்த 15-ந் தேதி கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com