பணி நிரந்தரம் செய்யக்கோரி 6ஆவது நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி 6ஆவது நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்று அரசு உறுதியளித்தது. ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வும் கோரி உள்ளது நர்சுகளின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com