கொரோனா பரிசோதனை

முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்தாதவர்களுக்கு கொரானா பரிசோதனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com