துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்

துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார். விசாரணைக்கு உதவியாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அலுவலகம் கேட்டு உயர்கல்வித்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்

அதன்படி, அவருக்கு உதவியாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதேபோல், விசாரணைக்கான அலுவலகத்தை பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

விசாரணையை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்துவது பற்றி கடந்த வாரத்தில் அவருக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக விசாரணைக்கான ஆயத்த பணிகளையும் தொடங்கினார். இதற்கிடையில் அரசு தரப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ய தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து புகார்கள் அளித்தவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும், பின்னர் மின்னஞ்சல் மூலம் வரும் புகார்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில், சூரப்பா நேர்மையானவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com