விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு:கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு:கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Published on

கிருஷ்ணகிரி:

காலாண்டு தேர்வு விடுமுறை, மிலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தி என பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் அனைவரும் நேற்று ஊருக்கு திரும்பினர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கோவை, திருச்சி, பெங்களூரு என அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் பெங்களூரு, ஓசூர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான கார்கள் சென்றன. இதனால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் நின்ற பிறகே கடந்து செல்ல முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com