பிச்சை எடுத்த போது மீட்கப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்.. விஷம் குடித்து தற்கொலை.. மனநலம் பாதிப்பா..?


பிச்சை எடுத்த போது மீட்கப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்.. விஷம் குடித்து தற்கொலை.. மனநலம் பாதிப்பா..?
x

பிச்சை எடுத்ததாக உறவினர்களால் மீட்கப்பட்ட நிலையில் சி.ஆர்.பி.எப். வீரர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆன்றனி (வயது 40). சி.ஆர்.பி.எப். வீரரான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். இவர் சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வதாக கூறி கிளம்பினார்.

ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் வேளாங்கண்ணியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று ஜோசப் ஆன்றனியை மீட்டனர்.

அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு குருந்தன்கோடு கொடுப்பைக்குழி அருகே உள்ள கரிசல்விளையில் உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு மறுநாள் காலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்திருந்தனர்.

மறுநாள் காலையில் ஜோசப் ஆன்றனியின் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜோசப் ஆன்றனி வாயில் நுரை தள்ளி மயங்கி நிலையில் கிடந்துள்ளார். அருகில் தென்னை மரங்களுக்கு வேரில் பயன்படுத்தப்படும் விஷ பாட்டிலும் கிடந்தது.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜோசப் ஆன்றனி பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story