தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
Published on

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் தம்மா தெருவில் மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையில் மின் கம்பிகள் 10 அடி உயரத்தில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பள்ளி பஸ், இதர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com