சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றம்

சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றம்
Published on

சிவகங்கையை அடுத்த டி.புதூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையொட்டி கிராம கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வருகிற 12-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com