மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதி சாவு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதி பரிதாபமாக உயிரிழந்தான்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதி சாவு
Published on

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 71). கடந்த 2 ஆண்டு முன்பு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com