டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை. டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் செய்தியில்,

"கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்த விஜயகுமார் ஐபிஎஸ் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமார் அவர்களின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com