சினிமா கிளைமாக்ஸ் விவாதம்: சட்டசபையில் கலகலப்பான உரையாடல்

இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
சினிமா கிளைமாக்ஸ் விவாதம்: சட்டசபையில் கலகலப்பான உரையாடல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்” என அறிவித்தார்.

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், "அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்"என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை" என தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது" என்றார்.

இதற்கு பதிலளித்த் அமைச்சர் வன்னி அரசு, “இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை” என்றார். இவ்வாறு சட்டசபையில் கலகலப்பான உரையாடல் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com