சாலை அமைக்கும் பணியில் தாமதம் - ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

சென்னையில் சாலை அமைப்பதில் தாமதம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சாலை அமைக்கும் பணியில் தாமதம் - ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமையேற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரவும், ஒப்பந்த நிலையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துர், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com