டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Published on

திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் 18 பெரியவர்கள், 17 குழந்தைகள், 7 கர்ப்பிணிகள் என மொத்தம் 42 பேர் சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒரு கர்ப்பிணிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 பேர் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 பேர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com