சுவாமிகள் புறப்பாடு

சுவாமிகள் புறப்பாடு நடந்தது.
சுவாமிகள் புறப்பாடு
Published on

நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் ஊஞ்சல் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மதியம் உற்சவர் செல்லாண்டியம்மன், மாரியம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக சேமங்கி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு புங்கோடை, மரவாபாளையம் வழியாக நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு சென்றனர். வழிநெடுக செல்லாண்டியம்மன், மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது வழி நெடுகிலும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com