துணை மேயர் ஆய்வு

நெல்லை டவுனில் துணை மேயர் ஆய்வு செய்தார்.
துணை மேயர் ஆய்வு
Published on

பேட்டை:

நெல்லை டவுன் 15-வது வார்டு பாறையடி குளத்தடி தெருவில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கு மாநகராட்சி குடிநீர் லாரி மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர் அஜய், உதவி செயற்பொறியாளர் பைஜூ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com