மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி

மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி
மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி
Published on

காவேரிப்பட்டணம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சுந்தரஅள்ளியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி தண்டபாணி தனது மகளுடன், தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் புலியூர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் தண்டபாணி ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி, அவரது மகள் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தண்டபாணி இறந்தார். பிரியதர்ஷினி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com