கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுப்பு
Published on

மதுரை,

மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண்ணால் செய்யப்பட்ட உடையாத பானை கண்டெடுக்கப்பட்டது. பானையின் உயரம் சுமார் 2 அடியும், அகலம் 1 அடி இருக்கும் என கூறப்படுகிறது. பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com