வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

தாயில்பட்டி அருகே பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
Published on

தாயில்பட்டி, 

பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் செந்தட்டி காளை தொடங்கி வைத்தார். மேலத்தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாயில்பட்டி நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி, கோட்டையூர் இந்து மறவர் நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com