விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
Published on

மன்னார்குடி:

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதால் குடிசை பகுதிகளில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மன்னார்குடி மோதிலால் தெரு குடிசை பகுதி மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com