மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.
மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
Published on

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாதன். இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடத்துக்கு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் லதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் வெளியிட்டார். இன்ஸ்பெக்டர் சபரிநாதன் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் இருந்ததால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com