அரசுப் பள்ளிகளை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கியுள்ளது திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

நாமக்கல் மாவட்டத்தில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி பலியான செய்தி மனதை பதைபதைக்கச் செய்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மனதை பதைபதைக்கச் செய்கிறது.

Also Read
கவர்னர் காரை போதையில் பின்தொடர்ந்த வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
கோப்புப்படம்

இரண்டு நாட்களுக்கு முன் திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் புத்தகம் எடுக்கும்போது பாம்பு கடித்ததில் பதினோராம் வகுப்பு மாணவன் பலியாகிய நிலையில், மீண்டுமொரு கொடூரச் சம்பவம் மற்றொரு அரசுப்பள்ளியில் நிகழ்ந்திருப்பது திமுக அரசின் கீழ் பள்ளிக் கல்வித்துறையின் அவல நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Also Read
யாருடன் கூட்டணி என்பதே தெரியவில்லை: விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தே.மு.தி.க. நிர்வாகிகள்
கோப்புப்படம்

ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன, மேற்கூரை இடிந்து விழுந்தால் என்ன, மதிய உணவில் புழு நெளிந்தால் என்ன என்று அலட்சியம் காட்டும் திமுக அரசால் தமிழக மாணவர்கள் பலியானது போதும். தம் பிள்ளைகளின் உயிரைப் பறித்து தமிழகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் திமுக அரசைத் தமிழக மக்கள் துரத்தியடிப்பர்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
சட்டமன்ற தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் நடைபயணம்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com