

சென்னை,
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர கவர்னருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட மனு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அடுத்த கட்ட முடிவு பற்றி அறிவிப்போம் என்று முக ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது.