டாக்டர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் - சென்னை ஐகோர்ட்

'டாக்டர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்’ என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.
டாக்டர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் - சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை,

மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டாக்டர்களின் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

மருத்துவர்களின் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் வாராகி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு வாராகி சார்பில் அவரது வக்கீல் முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், டாக்டர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், மனுதாரர் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. வரிசையின் அடிப்படையில் அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com