பெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை

தேனி அருகே பெண் என்ஜினீயரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டாக்டர் உள்பட 5 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் என்ஜினீயருக்கு வரதட்சணை கொடுமை
Published on

தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சைமணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மகள் ஆதித்யா (வயது 26). இவர் முதுகலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கும், தேவாரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் அசோக்ராஜா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அசோக்ராஜா தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது ஆதித்யாவின் பெற்றோர் 150 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், வீடு ஒத்திக்கு வாங்க ரூ.8 லட்சம் ஆகியவற்றை கொடுத்தனர். திருமணத்துக்கு பிறகு பழனிசெட்டிபட்டியில் ஒத்திக்கு வீடு வாங்கி அசோக்ராஜா தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில், அவரும், அவருடைய குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஆதித்யாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவருடைய நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆதித்யா புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் அசோக்ராஜா, மாமனார் பரமசிவம், மாமியார் ரதிசந்திரா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com