டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி: 

தூத்துக்குடி தெர்மல்நகர் ஊரணி ஒத்தவீட்டை சேர்ந்தவர் விக்னேசுவரன் (வயது 23). டிரைவர். இவருடைய முதல் மனைவி மாரிசெல்வி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதனால் விக்னேசுவரன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் விக்னேசுவரனுக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் விக்னேசுவரன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com