டிரைவருக்கு கத்திக்குத்து

டிரைவருக்கு கத்திக்குத்து
டிரைவருக்கு கத்திக்குத்து
Published on

கும்பகோணத்தில் டிரைவரை கத்தியால் குத்திய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதியைச்சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 51). இவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் திலகவதி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜனனி என்ற மகள் உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெங்கநாதன் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது ரெங்கநாதனிடம் அவரது பெயரில் கும்பகோணம் ஆலையடி ரோடு பகுதியில் உள்ள மனையை திலகவதி தனது பெயருக்கு எழுதி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.

கத்திக்குத்து

இதையடுத்து வெளிநாட்டிற்கு சென்ற ரெங்கநாதன் நேற்றுமுன்தினம் ஊருக்கு வந்தார். அப்போது கும்பகோணத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கடைதெருவிற்கு சென்றுள்ளார். அங்கு திலகவதி, தனது தம்பி காவர்கூடம் பகுதியைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெங்கநாதனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற வீரமணியை பொதுமக்கள் பிடித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

இதுகுறித்து ரெங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com