மதுபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை

கலவை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
மதுபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை
Published on

திமிரி

கலவை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அருப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40), கூலித்தொழிலாளி. பள்ளமுள்ளுவாடி, சின்ன நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பாலு.

இவரது மகன் கமலகண்ணன் வயது (33). தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று மதுபோதையில் தகராறு ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது. அப்போது கமலகண்ணன், மகாதேவனை பிடித்து தள்ளியதில் மகாதேவன் வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்.

தொழிலாளி சாவு

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவனை பரிசோதனை செய்த டாக்டர், மகாதேவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சென்று மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கமலகண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com