வாரவிடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
வாரவிடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
Published on

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினந்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இந்நிலையில் நீர்வரத்து சீரானதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இன்று வாரவிடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com