மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

கல்லிடைக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
Published on

கல்லிடைக்குறிச்சி:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் முகாமில் கலந்து கொண்ட மின்நுகர்வோர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com