

சென்னை,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த பின்னரும் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சேலம், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.