

சென்னை,
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒடிசா மாநில தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.