சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில்

சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில்
Published on

செங்கல்பட்டு,

சென்னை, சோழிங்கநல்லூர், துர்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா வயது (71). இவர் அப்பகுதியில் போண்டா கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி சுப்பையா நடத்தி வரும் கடையில் அடிக்கடி போண்டா வாங்கச் செல்வது வழக்கம். அது போல கடந்த 10.05.2017 அன்று அந்த சிறுமியிடம் போண்டா கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமியின் உடலில் அங்காங்கே காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிண்டி அனைத்து மகளிர் நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா சுப்பையா மீது வழக்குபதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழரசி சுப்பையாவுக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கில் புவனேஷ்வரி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com