விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தேனி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

தேனி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் வைரவன் (வயது 63). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால், மயக்கம் அடைந்த அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com